Skip to main content

Posts

Showing posts from April, 2023

தனித்தலையும் நட்சத்திரம்

சட்டென்று எப்படி ஆரம்பிப்பது? எதிலிருந்து தொடங்குவது? அது இயல்பாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால் வார்த்தை தடுமாறி உளறுவதற்கே வாய்ப்பு அதிகம். சின்ன முகச் சுளிப்பொன்று போதும் அவளுக்கு. கண்டுபிடித்துவிடுவாள். பின்னர், காரியம் கெட்டுவிடும். அவளை நான் விசாரிப்பதற்குப் பதில் அவளின் விசாரணைக்கு நான் உட்பட வேண்டியிருக்கும்.  ஆனால், பதில் கண்டுபிடித்தே தீரவேண்டும். ஒரு மாதம் சேகரித்த தகவல்களில் மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளினாலும் அந்த ‘ஒரு விசயம்’ உறுத்திக்கொண்டே இருக்கிறது.  சொல்லப்போனால் அச்சமாக இருக்கிறது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்றால், வெளியே சொல்ல முடியாது. அத்தனையும் இரகசியம். கொஞ்சம் ஒப்பந்தத்தை மீறினாலும் பெரிய பிரச்சினையில்போய் முடியும். வேலைகூட போய்விட வாய்ப்புண்டு. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது இப்படியான சிக்கல்களையெல்லாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை.  ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. மீரா, ராபர்ட்டோ பொலேனோவின் ‘த ரொமாண்டிக் டாக்ஸ்’ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அட்டையில் கறுப்ப

ஒளிரும் பச்சைக் கண்கள்

1 அன்று மதியம் நன்கு தூங்கிவிட்டிருந்தேன். கண் விழித்துப் பார்க்கும்போது இரவாகியிருந்தது. சட்டென்ற ஒரு கணத்தில் இது இரவா பகலா என்றொரு குழப்பம். மெல்ல நிதானித்து நினைவுக்கு மீண்டேன். இரவு, பகல், கிழமை என்று மொத்த காலமும் கிளை பற்றித் தொங்கும் இருட்டு வவ்வாலைப் போல தலைகீழாய்ப் போயிருந்தது. உணவு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. காலை உணவு மதியத்துக்கும் மதிய உணவு மாலைக்கும் இரவுணவு நள்ளிரவுக்கும் தள்ளிப் போயிருந்தது. சில நாட்களில் இரு வேளைகள், அரிதாக சில பொழுதுகளில் ஒரே வேளை என்றும் சுருங்கிற்று. அன்றாடத்தின் சகல ஒழுங்குகளும் கலைக்கப்பட்டுவிட்டன. இரவாகியிருந்தபோதும் ஹாலில் விளக்கேதும் போடப்பட்டிருக்கவில்லை. கையிலிருந்த மொபைலில் டார்ச்சினை ஒளிரவிட்டு கவனமாக அடியெடுத்து படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்குச் சென்றேன்.  கண்கள் மெதுவாக வெளிச்சத்துக்குப் பழகின. சுவரில் மாட்டப்பட்டிருந்த தூசு படிந்த திருமணப் புகைப்படத்துக்குப் பின்னால் பல்லியொன்றின் வால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. டி.வி இருக்கும் டேபிளின் மேலே மீராவின் ஒற்றைக் கம்மல் கழற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்கூட்டி சாவி மரத்தால் செய்யப்பட

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள்

ஆயிரம்முறை

அ ந்த அழைப்பு வந்தபோது அலுவலகத்தின் ஓய்வகப் பகுதியிலிருந்தேன். காஃபி மெசினிலிருந்து கிளம்பிய சத்தத்தில் முதலில் மொபைல் ஒலித்தது கேட்கவில்லை. சர்க்கரை வில்லைகளைப் போட்டுக் கலக்கும்போது பீங்கான் கோப்பையில் கரண்டி பட்டு எழும் ஒலியோடு இணைந்து மொபைலும் அடித்தது.  மறுபக்கம் அனு.  “எங்க இருக்க?” “ஆஃபிஸ்ல” “சரி.. ரொம்ப வேலையா?” “அப்படிச் சொல்ல முடியாது. ஆனா இருக்கு. சொல்லு பரவாயில்ல. பேச முடியும்.” “இல்ல, இப்போ நீ கிளம்பி வர முடியுமா?” “ஏன் ஏதாவது பிரச்சினையா?” “தெரியல.” “தெரியலன்னா என்ன அர்த்தம்?” “தெரியல்லன்னா தெரியலன்னு அர்த்தம்.” அழுதிருப்பாள் போல. குரல் கனத்திருந்தது.  “ஏன்ட்டி இப்படி சிடுசிடுன்னு இருக்க?” “கவின் ஸ்கூல்லருந்து கால் பண்ணிருந்தாங்க.” “ஓ.. என்னாச்சாம்?” “நீ நேர்ல வா சொல்றேன்.” “சரி, பத்து நிமிசத்துல கிளம்புறேன். ஒரு மெயில் அனுப்பனும். முடிச்சுட்டுக் கிளம்புறேன்.” “சரி. சீக்கிரம் வா!” O ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிவந்து இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அங்கே எடுக்காமல் வைத்திருந்த விடுமுறை மட்டுமே முப்பது நாட்கள் கையிலிருந்தது. இடையிடையே வந்த சனி ஞாயிற்றோடு சேர்த்து கிட